Day: June 13, 2024

செங்கதிரின் ரகசியம் – நாவல் தொடர் அறிமுகம்

அன்பிற்கினிய வாசகர்களே..!    உங்கள் அனைவரையும் நம் புதிய நாவல் தொடர் செங்கதிரின் ரகசியம் எனும் இழையோடு சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.  இந்த குறு நாவல், 18 ஆம் நூற்றாண்டின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் பின்னணியில், அமைந்துள்ள ஒரு அதிரடி மற்றும் பரபரப்பான கதையாகும். செங்கதிரின் ரகசியம் நாவல் தொடரில், நமது கதாநாயகன் குமரன் மற்றும் அவரது நண்பர்கள், குடும்பம், மற்றும் செல்லப்பிராணிகளின் மூலம் கிராமத்தின் மர்மங்களை ஆராய்ந்து, அதிர்ச்சித் திருப்பங்களை எதிர்கொண்டு, விறுவிறுப்பான பயணத்தில் திளைத்துக் கொண்டிருப்போம்.முதன்மை கதாபாத்திரங்கள்: முதன்மை கதாபாத்திரங்கள்: இக்கதையின் மையத்தில், செங்கதிரின் ரகசியம் எனப்படும் ஒரு பாரம்பரிய மர்மம் உள்ளது. இக்கதையின் ஒவ்வொரு அத்தியாயமும் நீங்கள் மூச்சு விடாமல் வாசிக்கும் வகையில் ஆர்வத்துடன் இருக்கும். ஒவ்வொரு வாரமும், ஒரு புதிய அத்தியாயத் தை உங்கள் முன் கொண்டு வருகிறேன். இந்த பயணத்தில், உணர்ச்சியும், சாகசமும், காதலும், அன்பும், துரோகமும் உங்களுக்கு கண்ணீரையும், குதூகலத்தையும் வர வைக்ககூடிய வகையில் அமையும். உங்கள் ஆதரவே என்னை எழுத தூண்டும் ஊக்கமருந்து… உடனே இணையுங்கள் உங்கள்கருத்தை பகிருங்கள்…  நன்றி வணக்கம்!  அன்புடன், மதன்

கிரிக்கெட் எங்கள் வாழ்வின் முக்கிய அங்கம்…😇

அத்துணை கவலைகளையும் மறக்க ஒரே மருந்து…நீங்க நினைக்கிற மாதிரி வேற கசாயம் இல்லை! ஓயாம வருசம் முழுதும் கூட விளையாடுர கிரிக்கெட்… சொல்லும் போதே சிலிர்க்குது!! அது என்ன விளையாட்டு தானனு நீங்க சொல்றது கேக்குது, ஆனால் எங்களோட உணர்வுலயும் நினைவுலயும் கிரிக்கெட் நிறைந்து இருக்குங்க ❤️ தென்னை மட்டை 5ரூ பெப்சி பந்துல இருந்து ஆரம்பிக்குது கிரிக்கெட்க்கும்🏏 எங்களுக்குமான உறவு. விவரம் தெரிஞ்சு நாங்க அதிகமா விளையாடிய விளையாட்டு கிரிக்கெட் தா… லீவு விட்டா போதும் […]

Back To Top