Episode 1: ஒரு புதியயுகத்தின்பிறப்பு (The Dawn of a New Era)

8 ஆம் நூற்றாண்டு, தமிழ்நாட்டின் அழகான ஒரு கிராமம். பசுமையான காடுகள், குளிரான காற்று, மலைகளின் பின்னணியில் அமைந்துள்ள கிராமத்தின் நடுவில் நம் கதாநாயகன் குமரன் வாழ்ந்து வருகிறான்.

குமரன், தன்னுடைய தாயாராகிய தாமரை மற்றும் தாத்தியாகிய செங்கமலம் உடன் வசிக்கிறான். தன்னுடைய நண்பனாகிய கருப்பன் மற்றும் செல்ல நாய் மணி, ஆடு ராஜா உடன் எப்போதும் உற்சாகமாக இருப்பான். குமரன், தன்னுடைய ஆசானாகிய கந்தன் அவர்களிடமிருந்து யுத்தக் கலைகளை கற்றுக்கொள்கிறான்.

ஒரு நாள் காலை, குமரன் தன்னுடைய யுத்தக் கலை பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டிருந்தான். கந்தன் அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

கந்தன்: “குமரா, உனக்கு இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. பகைவர்களை வெல்ல துணிவும் அறிவும் மிகவும் அவசியம்.”

அப்போது, குமரனின் காதலி பரிஜாதம், அவருக்கு உணவு கொண்டு வந்தாள்.

பாரிஜாதம் : “குமரா, நீ எப்போதும் பயிற்சியில் தான் இருக்கிறாயா? உன் ஆரோக்கியத்துக்கு நான் பொறுப்பு.”

குமரன்: “நான் உன்னை கரம்பிடிக்கவும், கிராமத்தை பாதுகாக்கவும் போர்பயிற்சியை கற்றுக்கொள்கிறேன், பரிஜாதம்.”

அந்த நேரத்தில், அசுரன் மற்றும் பூபதி, குமரனின் வீட்டிற்கு அருகில் தற்செயலாக வந்து விடுகின்றனர்.

பூபதி: “நாம் குமரனின் பலவீனங்களை அறிந்து வைத்து, அவனை வீழ்த்தி நம் திட்டத்தை நிறைவேற்றுவோம்.”

அவர்களின் திட்டம், கிராமத்தில் உள்ள ரகசியத்தை கைப்பற்றுவதாகும். குமரனின் தாத்தா எழுதின புத்தகத்தில் அந்த ரகசியம் உள்ளது என்பதை அவர்கள் அறிகின்றனர்.

இரவில், குமரன் தன்னுடைய தாத்தாவின் பழைய புத்தகங்களை ஆராயும்போது, ஒரு பழைய புத்தகத்தை  கண்டுபிடிக்கிறான்.

குமரன்: “இது என்ன? தாத்தா ஏன் இதை மறைத்து வைத்தார்?”

அந்த புத்தகத்தில், செங்கதிரின் ரகசியம் பற்றி குறிப்புகள் உள்ளன. குமரன் இதனை ஆராய்ந்து பார்க்கும்போது, அவனுக்கு புரியாத விஷயங்கள் தோன்றுகின்றன.

செங்கமலம்: “குமரா, அது ஒரு சக்தி வாய்ந்த ரகசியம். அது நம் குலத்தினரின் பாரம்பரியத்தின் ஒரு பகுதி. அதை பாதுகாக்க நாம் பொறுப்பானவர்கள்.”

அப்போது, குமரன் புரிந்து கொள்கிறான், அவனுக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது – செங்கதிரின் ரகசியத்தை பாதுகாக்கும் பொறுப்பே அது.

அடுத்ததாக: குமரன், செங்கதிரின் ரகசியத்தை காப்பாற்ற போராட வேண்டிய நேரம் வந்துள்ளது. அசுரனின்சதி, குமரனின்வலிமையை சோதிக்கவருகிறது. இன்னும் அடுத்தகட்டம் என்னவென்று காண, அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.

Stay tuned for Episode 2: மறைந்திருக்கும் மர்மம் 

அன்புடன், மதன்


Discover more from Nanbaninfo

Subscribe to get the latest posts to your email.

Nanban

Leave a Reply

Back To Top

Discover more from Nanbaninfo

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nanbaninfo

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading