“ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” அப்புடின்னு பாரதி சொன்னது உண்மைதான். ஆனா, நமக்கு என்னமோ சச்சின், சேவாக்-னு மனசுல நெனப்பு… அப்போல இருந்து இப்போ வர எப்பப்பெல்லாம் நேரம் கிடைக்குதோ அ ப்பயேல்லாம் அந்த கிரிக்கெட் பேட்டையும் , பந்தயும் கையில் எடுத்து ஒரு ஆட்டமாவது ஆடினா தாங்க எங்களோட மனசு நிறைவா இருக்கும்.
நாங்க மைதானத்தில் மட்டும் ஆடி கிரிக்கெட் கத்துக்கிட்டவங்க கிடையாது கோயிலுக்கு முன்னாடி! வண்டி போற ரோட்டுல!! ரெண்டு வீட்டுக்கு இடையில் இருக்க கேப்புல!!! காம்பவுண்டு ஏரி குதிச்சு வாட்ச்மேனுக்கு தெரியாம ஸ்கூல் கிரவுண்டுல, பொட்ட காட்டுல இப்படி எல்லா இடத்திலும் நாங்க ரவுண்டு கட்டி அடிச்ச ஒரே அடி எங்க கிரிக்கெட் தாங்க…!
![](https://i0.wp.com/nanbaninfo.in/wp-content/uploads/2024/06/image_editor_output_image1188553745-17187269455818506624827804430030.jpg?resize=640%2C535&ssl=1)
நடுரோட்டுல விளையாடி போறவங்க வரவங்க மேல பந்து அடிச்சதும், கோயிலுக்கு முன்னாடி விளையாடி முள்ளுக்குள்ள பந்து அடிச்சு தொலைக்கிறதும் தான் எங்களுக்கு ஹாபி…விளையாட எப்படி டா போவீங்க அப்புடின்னு கேப்பிங்க! சைக்கிள்ள டபுள்ஸ் போய் பார்த்திருப்பீங்க, நாங்க டிரிபிள்ஸே போவோம்…😄 எல்லாம் அப்போதான் வண்டி ஓட்ட கத்துகிட்டு இருந்தோம் ஒரு வண்டியில ரெண்டு பேர் போவாங்க, மூணு பேர் போவாங்க நாங்க ஏழு எட்டு பேர் போவோம்!! முன்னாடி சக்கரத்துல உக்காந்துட்டு வர்ற அளவுக்கு வீரன்லாம் இங்க இருக்காங்க!!! ஒரு டிவிஎஸ் வண்டி (TCY 1548) அது எங்க கிட்ட மாட்டிகிட்டு பட்ட பாடு ஒத்த மாட்டு வண்டில ஓவர் லோடு ஏத்துன மாதிரி தான் 😂
இது மட்டும் இல்லைங்க கிரிக்கெட் ஆடும் போது நாங்க பாக்காத பிரச்சனையே இல்லை… கேட்ச்சு பிடிக்க போய் மூக்குடைவதும், பந்து எடுக்க போய் ஏணியில கால கிழிச்சுகிறதும் ! இப்படி என்னதான் மோசமா அடிபட்டு வந்தாலும் செல்லமா திட்டிகிட்டே எங்களுக்கு மருந்து போட்ற எங்க ஊரு அவசர 108 தர்மராஜ் டாக்டர்.
ஆம்புலன்ஸ் வசதி லாம் பெருசா இல்லாத காலத்திலேயே சுத்தி இருக்கா 4,5 ஊர்ல நெறைய பேர காப்பாத்தி உட்ருகாரு எங்க தர்மராஜ் டாக்டர். எங்களோட “காவிரி தாய்” தான் எங்க கிரவுண்டு பக்கத்திலேயே இருக்க தர்மராஜ் டாக்டர் வீடு அங்க போனா ஒரு குடம் நிறைய தண்ணீர் எடுத்து கொடுத்துறுவாங்க…!
![](https://i0.wp.com/nanbaninfo.in/wp-content/uploads/2024/06/img_2024_05_28_21_50_303788142211786401921.jpg?resize=640%2C467&ssl=1)
இதுபோக திருட்டு இளநீர் வேற எங்க லிஸ்ட்ல இருக்கு😅 அது என்னன்னா அப்படியே கிரிக்கெட் ஆடிட்டு இருக்கும்போது ஹெவியா வெயில் அடிக்கும் வெயிலுக்கு ஒரு இளநீர் குடிச்சா நல்லா இருக்கும்னு யோசிக்கும் போது தான் ‘தேள் பத்திரி சிங்‘ அப்படின்னு எங்க நியாபகத்துக்கு வர்றது எங்க ஊரு ஹாஸ்டல்!!! ஸ்கூல் லீவா இருந்தா போதும் ஹாஸ்டல்ல யாரும் இருக்க மாட்டாங்க செவுரை ஏறி குதிடா , மரத்துல ஏறி பறிடானு… கொல கொலையா பிச்சு கல்ல கொண்டு அடிச்சு உடைச்சு வாய் வச்சு குடிச்சா என்ன சுவை அப்பப்பா…! இது மட்டும் இல்லாம பந்த தொலைக்கறதும் அதை தேடுறதுமே எங்களுக்கு பெரிய வேலையா இருக்கும்…
![](https://i0.wp.com/nanbaninfo.in/wp-content/uploads/2024/06/img_2024_05_28_21_50_025490791512366626791.jpg?resize=640%2C830&ssl=1)
“ஒரு பால் வாங்க ஒரு வாரம் ! ஒரு கிரிப் வாங்க ஒரு மாசம்!! அதுவே ஒரு பேட் வாங்க ஒரு யுகமே தேவைப்படும்!!!”அப்படியே அந்த பேட் வாங்கிட்டாலும் அதை நாங்க எப்படி எல்லாம் ரெடி பண்ணுவோம் தெரியுமா ஸ்டிக்கர் பிரிச்சு ஹாண்டில் நூலை சுத்தி அந்த பேட்ட கல்ல வச்சு அடிச்சாலும் உடையாத அளவுக்கு மாத்திடுவோம்… நாங்களும் வளந்துட்டதால எங்களோட சீனியர்ஸ் ஆன நண்பன் கூட சேர்ந்து நாங்களும் எல்லா பக்கமும் டிராவல் பண்ண ஆரம்பிச்சு வெளியூர்ல நடக்கிற கிரிக்கெட் தொடர் பெட் மேட்ச்னு போய் ஆடும் போது தான் எங்களோட உண்மையான கிரிக்கெட்டே எங்களுக்கு தெரியும். அது தெரிஞ்சா அப்புறம் தான் அதை எங்க ஸ்கூல் கிரவுண்டுக்குள்ளயே வச்சு முடிச்சுகிட்டோம்!!😅
இதுபோக நாங்க ஆடுற பெரிய டோர்னமெண்ட்டுனா அது எங்க பொங்கல் -அம்ரூத் சுழல் கோப்பை தான்… ஆரம்பத்தில எங்க ஊர்ல இருந்த மூணு டீம் கூட தான் பெரும் போட்டியே முக்கோண போட்டியா இருந்துச்சு. இப்பவும் அது முக்கோண போட்டியா தான் இருக்கு சூப்பர் சீனியர்; சீனியர்; ஜூனியர் டீம்னு ஆடிட்டு இருக்கோம்! இதுல என்ன ஒரு சோகம்னா ஜூனியர் டீம் ரெண்டு தடவை கப் அடிச்சுட்டாங்க!!! “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்” அப்படிங்கற மாதிரி இந்த பொங்கல் விளையாட்டுல நாங்க தர்மத்தை நிலை நாட்டுவோம் என்று நம்புகிறேன்!!!
![](https://i0.wp.com/nanbaninfo.in/wp-content/uploads/2024/06/img-20240618-wa00088063068314082847245.jpg?resize=640%2C800&ssl=1)
என்னதான் ஒவ்வொரு தடவை வேர்ல்டு கப் தோக்கும்போதும் இனி கிரிக்கெட் பாக்க கூடாதுன்னு சபதம் எடுத்தாலும்; அடுத்த சீரியஸ் ஆரம்பிச்சதும் டிவியை போட்டுட்டு உக்காந்துருவோம்!!! இதுல ஹைலைட் என்னன்னா அந்த மேட்ச் பாத்துட்டு முடிஞ்சதுக்கு அப்புறம் பசங்களோட சேர்ந்து மேட்ச் பத்தி பேசுறது தான் … ஒவ்வொரு பாலையும் அவன் அப்படி அடிச்சான் இவன் இப்படி அடிச்சான் அப்படின்னு சொல்லி அவன் அவனுக்கு புடிச்ச பிளேயரை பத்தி ஏதோ நாங்களே அங்க போய் அடிச்ச மாதிரி பீல் பண்ணி பேசிக்குவோம்… உலகத்துல விளையாட்டு ஒன்னு இருக்கிற வரைக்கும் எங்களோட கிரிக்கெட் மோகமும் தாகமும் எப்போதும் குறைய போறதில்லை….என்ன ஊருக்குள்ளேயே சுத்துறீங்களே வெளிய எங்கயும் போகலையானு யோசிக்கிறது தெரியும் அடுத்த எபிசோட்ல எங்களோட ஸ்விம்மிங் பூலையும் நாங்க அடிச்ச நீச்சலையும் பத்தி பேசுவோம் ரெடியா இருங்க…!
Author: Ajith Kumar…
Discover more from Nanbaninfo
Subscribe to get the latest posts to your email.